Main Menu

1ஆம் ஆண்டு நினைவுத் திதியும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். இலட்சுமியம்மா சிற்சபேசக்குருக்கள் (24/04/2023)

இந்தியா – பாபநாசம் என்னுமிடத்தை பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், அராலியை புகுந்த இடமாகவும் கொண்ட சிற்சபேசக்குருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் 24ஆம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மகன் ரவிச்சந்திரன் (தாயகம்) அன்பு மகள் சசிகலா (France), அன்பு மருமகன் சிவசுதக்குருக்கள் (France) அன்பான பேரப்பிள்ளைகள் ராஜவர்மன் (France) ஸைநிகா &நிசாகர் (Norway) சிபிவிஷ்டன் (France) ஆகியோர்

சிற்சபேசக்குருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் மருமகன் &மகள் திரு திருமதி சிவசுதக்குருக்கள் சசிகலா தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றி

பகிரவும்...