Main Menu

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் – ஹக்கீம்

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 

இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 

பகிரவும்...