Main Menu

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை குஷ்பு பேட்டி

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க. அரசு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை. வரி வசூல் மூலம் பெறப்படும் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது தெரிய வில்லை.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை. மாறாக தமிழகத்தில் கடன் சுமைதான் அதிகரிக்கிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏராளமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இருந்த போதிலும் சரி, தற்போதும் சரி எந்தவித மக்கள் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை.
நாங்குநேரியில் அதிகார பலம், பணப்பலத்தை வைத்து அ.தி.மு.க. வெற்றி பெற நினைக்கிறது. ஆனால் அது நடக்காது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கோட்டை. இங்கு காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு மாறியுள்ளனர். அவர்கள் தெளிவாக உள்ளனர். எனவே அ.தி.மு.க. வின் பணப்பலம் இங்கு வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...