Main Menu

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் – குஷ்பு அறிவிப்பு!

ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன் என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் திருவையாறில் பா.ஜ. சார்பில் நடந்த ‘நம்ம ஊர் பொங்கல் விழா’வில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி பா.ஜ.க சார்பில் நாங்களும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது வழக்கம் தான். ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன்.

சிதம்பரம் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா.வில் இணைந்து தனியாக கட்சி தொடங்கி தோல்வியடைந்த பின் மீண்டும் காங்ரஸில் சேர்ந்தார்.எங்களை எங்களை போன்றவர்கள் மகனுக்கு போட்டியாக வந்து விடுவோம் என பயந்து சிதம்பரம் எங்களை புறக்கணித்தார்’

நாட்டில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. எங்கள் கட்சிக்கு விதிமுறைகள் உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

பா.ஜனதா- அ.தி.மு.க. இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கடுமையான சட்டம் இயற்றும் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடரும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மூலத்தை
சரியாக படித்து பார்த்தால் இது விவசாயிகளுக்கு சாதகமானது என்பது புரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...