வெளிநாட்டு பயணிகளுக்கான தடையினை நீடித்தது கனடா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய காரணங்களுக்காக அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் அதேசமயம் கனடாவில் சிக்கியுள்ள மற்ற நாட்டவர்களை அழைத்துச் செல்ல வரும் சிறப்பு விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.