Main Menu

வீதியில் வாக்குவாதம் – இளம்பெண்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற சாரதி கைது!

பரீஸில், சேம்ஸ் எலிஸிஸ்க்கு (Champs-Elysées) அருகில் வீதியில் சென்ற இரண்டு இளம்பெண்கள் வாகனச் சாரதியொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த இரண்டு இளம்பெண்களும் நடைபாதையை விட்டு வீதியில் இறங்கி நடந்து சென்றதால் அவர்களை வாகனத்தை செலுத்திய பெண் அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்த பெண்கள் அவர் அறிவுறுத்தியதைச் செவிமடுக்காமல் அவரை அவமதித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சாரதி அந்தப் பெண்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் ஒரு பெண்ணுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு பெண்ணுக்கு காயங்கள் ஏற்பட்டாலும் பெரியளவில் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஏராளமானோர் கண்டுள்ளனர்.

இந்தநிலையில், பிறிதொரு பெண்ணுடன் காரை செலுத்திச் சென்ற பெண் சாரதி, இளம்பெண்களை கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

ஆனால் வீதியில் சற்று தொலைவில் சமிஞ்ஞை விளக்கில் சிவப்பு விளக்கு எரிய, அவர் காரை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனடியாகக் காரை சுற்றி வளைத்த பாதசாரிகள் 20 பேர், பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

பகிரவும்...