Main Menu

விவசாயிகள் போச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் – ராஜ்நாத் சிங் அழைப்பு!

போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாயிகளுக்குப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ ஒரு விவசாயி மகன் என்ற முறையில் பேச்சு நடத்த அழைப்பதாகவும் அரசு ஒருபோதும் விவசாயிகளை ஏமாற்றாது என்றும் ராஜ்நாத் தெரிவித்தார்.

வேளாண்துறைச் சீர்திருத்தங்கள் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட வழிவகுக்கும் என்றும்  இதன் பயன்கள் அடுத்த ஐந்தாண்டுகளில் தெரியவரும் என்றும் குறிப்பிட்டார்.

பகிரவும்...