விவசாயிகளின் போராட்டம் : பிரபலங்கள் ஆதரவு!
வேளாண் திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறுமாறு கோரி விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா
விவசாயிகள் இந்தியாவின் உணவுப் போர்வீரர்கள். அவர்களுடைய பயத்தைப் போக்க வேண்டும். அவர்களுடைய நம்பிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். ஜனநாயக நாடான நாம் இந்தப் பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
நடிகர் ரிதேஷ் தேஷ்முக்
இன்று நீங்கள் உணவு அருந்தினால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவியுங்கள். நம் நாட்டின் அனைத்து விவசாயிகளுடன் நான் துணை நிற்கிறேன்.
நடிகை ப்ரீத்தி ஜிந்தா
இந்தக் குளிரிலும் கொரோனா சூழலிலும் போராடும் விவசாயிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு என் ஆதரவைத் தெரிவிக்கிறேன். பூமியின் படைவீரர்களாக நம் நாட்டின் முன்னேற்றத்தில் அவர்கள் பங்களிக்கிறார்கள். விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவைத் தரும் என நம்புகிறேன்.
நடிகை சோனம் கபூர்
உழவுத் தொழில் தொடங்கும்போது இதர கலைகளும் பின்தொடரும். எனவே மனித நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் விவசாயிகள் – டேனியல் வெப்ஸ்டர்.