Main Menu

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய மேயருக்கு 5 வருட சிறை

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான்ன ஆகியோருக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ கூறியிருந்தார். 

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...