Main Menu

விமான இரைச்சலால் பாதிக்கப்படும் நகர மக்களுக்கு விரைவில் தீர்வு!

பிரான்சில் ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து வௌியேறும் விமானங்களால் தங்களின் உறக்கம் பாதிக்கப்படுவதாக செய்ன்ட் மவுர் நகர மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜுலை மாதத்தில் இருந்து ஓர்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள், Saint-Maur (Val-de-Marne) நகருக்கு மேலாக பறக்கின்றன.

காற்று வீசும் திசை காரணமாக நகருக்கு மேலாக கடல் மட்டத்தில் இருந்து 650 மீற்றர் உயரத்தில் விமானங்கள் மேலெழுந்து பறக்கின்றன.

இதனால் குறித்த நகரத்தில் 80 டெசிபல்களுக்கும் அதிகமாக ஒலியின் அளவு பதிவாகின்றது. காலை 6 மணி முதல் ஆரம்பிக்கும் விமான இரைச்சல்கள், நள்ளிரவுக்கு பின்னரும் தொடர்வதாக முறையிடப்பட்டுள்ளது.

குறித்த விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 600 விமானங்கள் வரை பறப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை பற்றி விமானநிலைய நிர்வாகம் கூறுகையில், ஓர்லியில் அமைக்கப்பட்டுவரும் நான்காவது ஓடுதளத்தின் பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என்பதால், டிசம்பர் 2 ஆம் திகதி வரை இந்த பிரச்சினை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதன் பின் இந்த பிரச்சினை இருக்காது என்று தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பகிரவும்...