Main Menu

வவுனியா வைத்தியசாலை, மதீனாநகர் பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல்!

வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் இன்று (சனிக்கிழமை) அவதானித்தார். அது தொடர்பாக வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு தெரியபடுத்தினார்.

இந்நிலையில் குறித்த அநாமதேய கடிதத்தில், வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றில் எதிர்வரும் திங்கட்கிழமை வெடிகுண்டு வைக்கப்படவுள்ளதாக எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை, குறித்த மிரட்டல் கடிதம் காரணமாக வவுனியா வைத்தியசாலையைச் சூழவுள்ள அனைத்து பகுதிகளிலும் இரகசிய கமெரா பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மதீனாநகர் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...