Main Menu

வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்!- தனியார் வாகனங்கள் உள்நுழைய தடை

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில், வவுனியா நகரின் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய பேருந்து நிலைய பகுதிக்குள் செல்லும் தனியார் வாகனங்கள் பிரதான வாயிலில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பகுதியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர்களின் வாகனங்களையும் பேருந்து நிலையத்திற்கு வெளியே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து பேருந்து நிலைய பகுதி வெறிச்சோடி காணப்படுவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...