Main Menu

வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்

வவுனியாவிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31ஆவது நினைவுதினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கே.அருந்தவராஜா தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது பத்மநாபாவின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

பகிரவும்...