Main Menu

வடக்கு மாகாண ஆளுநராக சத்திர சிகிச்சை நிபுணர் பரிந்துரை

வடக்கு மாகாண ஆளுநர் நியமனம் தாமதமாகிவரும் நிலையில் ஆளுநராக நியமிக்க பலரது பெயர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி அரவிந்தன் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விசேட சத்திர சிகிச்சை வைத்தியராக பணியாற்றியிருந்தார்.

தந்போது அவர் கொழும்பில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...