Main Menu

லக்சம்பேர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இலங்கை 

இலங்கை லக்சம்பேர்க்குடன் இருதரப்பு ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற இரண்டாவது ஐரோப்பிய யூனியன் இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மன்றத்தின் ஒரு பகுதியாகஇந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன்பின்னர் லக்சம்பேர்க் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்னுடனும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பகிரவும்...