Main Menu

ராமர் பாலம் விவகாரம் : மக்களவையில் மத்திய அரசாங்கம் விளக்கம்

கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என இந்தியாவின் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அமைச்சர் கிஷண் ரெட்டி கூறியுள்ளார்.

அதேநேரம் கடலில் மூழ்கிய பகுதிகள் எதையும் தேசிய சின்னமாக அறிவிக்கும் பரிந்துரை எதுவும் தற்போது நிலுவையில் இல்லை என்றும் மத்திய கலாசார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...