Main Menu

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை ஆரம்பம்

இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்கும் சோதனை இந்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பார்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் இந்த வாரத்தில் சோதனை தொடங்கும் என்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் மூன்றாம் கட்டச் சோதனைகள் ஒன்றாகச் செய்யப்படுவதாகவும் அதற்கு மருத்துவ ஆராய்ச்சிக் குழு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ரெட்டி லேபரட்டரீஸ் நிறுவனத்துக்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...