Main Menu

ரணில் இணக்கம் – எதிர்க்கட்சி தலைவர் சஜித்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே குறித்த முடிவு எட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக மனோ கணேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...