Main Menu

ரணிலோ, டலஸோ எந்த உறுதி மொழியையும் இதுவரை வழங்கவில்லை – ஸ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று மாலை 5மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதன் பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவோ அல்லது டலஸ் அழகப்பெருமாவோ தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எந்தவித உறுதிமொழியையும் வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...