Main Menu

ரஜினி மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி புதிய கட்சியை அறிவித்தார்- ரஜினி வாழ்த்து!

ரஜினி மக்கள் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (இ.ம.மு.க.) என கட்சிக்குப் பெயரிட்டுள்ளதாக அவர் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து, பின்னர் கட்சி ஆரம்பிப்பதைக் கைவிட்ட நிலையில், ரஜினி விட்டுச்சென்ற வழியில் அரசியல் கட்சி தொடங்குவேன் அர்ஜுன மூர்த்தி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயர் உள்ளிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, “இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல், தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படும் அரசியல், இந்தக் கட்சிக்குச் சாதி, மதம் இல்லை, ஆணவத்தால் வரும் மதமும் இல்லை” என அர்ஜுன மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அர்ஜுன மூர்த்தி தொடங்கிய புதிய கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்து அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனை, தனது ருவிற்றர் பக்கத்தில் வெள்ளியிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, “உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள்” என ரஜினிகாந்துக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் .

பகிரவும்...