Main Menu

ரக்பி உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியனை வெளியேற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!

ரக்பி உலகக்கிண்ண தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், மூன்று முறை உலகக்கிண்ணம் வென்ற நியூஸிலாந்து அணியும், ஒருமுறை உலகக்கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியும் களத்தில் முட்டி மோதின.

இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது, யோகோஹமா சர்வதேச விளையாட்டங்களில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், நியூஸிலாந்து அணிக்கு கடும் சவால் அளித்த இங்கிலாந்து அணி, 19-07 புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதில் இங்கிலாந்து அணி 2003ஆம் ஆண்டு சம்பியன் பட்டம் வென்றது. மேலும், 1991ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இரண்டாவது இடம் பிடித்தது.

தோல்வியடைந்த நியூஸிலாந்து அணி, இதற்கு முன்னதாக 1987ஆம், 2011ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டமும், 1995ஆம் ஆண்டு இரண்டாவது இடமும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...