Main Menu

யாழ். மாநகர மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் பிரதமர்

யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) நாட்டி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த கட்டடத்துக்கான அடிக்கல்லை  நாட்டி வைத்துள்ளார்.

2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த கட்டடம் அமைக்கப்படவுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் நிதியமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...