Main Menu

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் அருட்தந்தையர்கள் பங்கேற்புடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டமை குறிப்பிடக்கது.

பகிரவும்...