Main Menu

யாழ்ப்பாணத்தில் 26 பேருக்கு கொரோனா!- பல இடங்களில் தொற்றாளர்கள் கண்டறிவு!

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாகவும் இவர்களில் யாழ்.மாவட்டத்தின் பல இடங்களைச் சேர்ந்த 26 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி, கொக்குவில்-1, தெல்லிப்பழை-3, அளவெட்டி-2, உரும்பிராய்-1, நவாலி-1, கீரிமலை-2, மானிப்பாய்-2, உடுவில்-2, இணுவில்-2, சங்கானை-1, பண்டத்தரிப்பு-1, சுன்னாகம்-2, கைதடி-1, ஏழாலை-3, காங்கேசன்துறை-1 மற்றும் சண்டிலிப்பாய்-1 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பகிரவும்...