Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து- செல்வி.அஸ்வி ரமேஷ் (13/12/2020)

தாயகத்தில் தர்மபுரம் கிளிநொச்சியை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ரமேஷ் கிருஷ்ணகிருபா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஸ்வி தனது முதலாவது பிறந்தநாளை 13ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகின்றார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஸ்வி செல்லத்தை அன்பு அப்பா ரமேஷ், அன்பு அம்மா கிருஷ்ணகிருபா தாயகத்தில் வசிக்கும் பூட்டி அன்னமுத்து (கிளிநொச்சி) கொழும்பில் வசிக்கும் அப்பப்பா ராஜதாஸ், அப்பம்மா சுமதி, கிளிநொச்சியில் வசிக்கும் அம்மம்மா கமலா, வவுனியாவில் வசிக்கும் அம்மப்பா தேவராஜா, அம்மம்மா ரஞ்சிதமலர், கொழும்பில் வசிக்கும் சுரேஷ் மாமா, ரமணி அத்தை, மற்றும் பிரான்சில் வசிக்கும் காந்தரூபன் மாமா, சுஜாதா அத்தை வவுனியாவில் வசிக்கும் ரூபன் மாமா, நிர்மலா அத்தை, வவுனியாவில் வசிக்கும் பெரியப்பா சந்திரகுமார், பெரியம்மா சுதா,வவுனியாவில் வசிக்கும் சிவசக்தி பெரியப்பா, நந்தினி பெரியம்மா, யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரியப்பா சசிகுமார், லதா பெரியம்மா, கிளிநொச்சியில் வசிக்கும் சதீஸ் பெரியப்பா, ரோகிணி பெரியம்மா,மற்றும் கீர்த்தன் மச்சான், மச்சாள்மார் அபிரா, ஆரதி, ரூபேசன் மச்சான்,ருக்சனா மச்சாள், ருக்சாயினி மச்சாள், கிருஷன் மச்சான், மச்சாள் ரஸ்தினா, மச்சாள் பிரவீனா, அண்ணா விதுர்சன், அக்காமார் வேணுஷா, டெனுஷா, வதுஷா, அண்ணாமார் பிரணாப், பிரவீன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பூவரசங்குளம் நரசிம்மர் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்று முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் அஸ்வி செல்லத்தை TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார், மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று எல்லா வளங்களும் பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் அஸ்வி செல்லத்தின் அன்பு மாமா அத்தை காந்த ரூபன் சுஜாதா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றி!

பெல்ஜியம் மண்ணில் பிறந்த செல்வமே
வம்ச விருத்தியாய்க் கண்டடைந்த உள்ளமே
இல்லத்தின் மகிழ்ச்சி உன்னால் அன்றோ
இரவு பகல் மகிழ்ச்சியில் மிளிர்கிறோம் அன்றோ
துள்ளி வளரும் வயது ஒன்றானது
அள்ளி மகிழும் அன்பு நன்றானது
செல்வத்தின் செல்வமாய் உந்தன் வரவு
திருவடி பூமியில் பதிந்திடும வளர்வு
கல்வியில் பெருமையும் செல்வமும் சிறப்பும்
எதிர்காலம் தன்னில் கண்டடையும் நிகழ்வு
வெற்றிச்செல்வமே வீறு நடை போடு
உண்மையின் அன்பை உலகத்தில் கூறு
உந்தன் வளர்வால் நாம் காணும் பேறு
வளர்வாய் மகிழ்வாய் உலகில் பெயர் பொறிப்பாய்
மகிழ்ச்சி கொண்டு வாழ்த்துகிறோம்
உலகில் சிறப்புக்கள் கண்டு சீராக வாழ்ந்திட வாழ்த்துகிறோம்!

அத்தை சுஜாதா
மாமா காந்தரூபன்.

பகிரவும்...