Main Menu

யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்

காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் தொடர்கின்றது.

பகிரவும்...