Main Menu

யாழ்,போதனா வைத்திய சாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 68 பொதுமக்களின் நினைவஞ்சலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் இந்தியப் படைகள் நடத்திய படுகொலையில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட 68 பொதுமக்களின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று (21) கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ சேவையாளர்கள் உள்பட வைத்தியசாலைப் பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதி புகுந்த இந்தியப் படையினர், 68 அப்பாவிகளை சுட்டுப் படுகொலை செய்தனர்.

இரண்டு நாள்களாக வைத்தியசாலை ஆக்கிரமித்து வைத்திருந்த இந்தியப் படைகள், மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்களையும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களையுமாக 68 பேரைக் கொன்று குவித்து கொலைவெறித் தாண்டவம் ஆடினர்.

தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகள் அரங்கேற்றிய பல படுகொலைச் சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.

பகிரவும்...