யாழில் நிமோனியாவால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நியூமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) திடீரென மயங்கி விழுந்த இளைஞனை வீட்டார் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
விசாரணைகளில் நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.