Main Menu

யாழின் பிரபல பெண்கள் பாடசாலைக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டு கல்லூரிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரியின் அதிபர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார் என்று தெரிவித்து அவரது வீட்டு முகவரி தபால் திணைக்கள உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் திருமதி ரேணுகா சண்முகரத்தினத்தின் வீட்டிற்கு அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அதிபர் அதனை வாசித்தபோது அந்தக் கடிதத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல பெண்கள் கல்லூரியாகக் காணப்படும் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அடுத்த மாதம் குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெறவுள்ளது.

இந்தத் தாக்குதலை ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொள்ளவுள்ளனர் என ஆங்கிழத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த விடயத்தை கல்லூரியின் தற்போதைய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய முன்னாள் அதிபர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இந்த அநாமதேய கடிதத்தினால் பாடசாலையின் ஆசிரியர், மாணவர்கள் இடையே பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பகிரவும்...