Main Menu

காணாமல்போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கனிமொழி உறுதி!

புயல் எச்சரிக்கைக்கு முன்பே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதியளித்துள்ளார்.

தருவைக்குளம் பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) விஜயமொன்றை மேற்கொண்ட  கனிமொழி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புயல் எச்சரிச்சைக்கு முன்னரே மீன்பிடிக்கச் சென்ற 38 மீனவர்கள் நிலை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து நான் மாவட்ட ஆட்சியர் மற்றும் டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

தற்போது 4 படகுகளில் உள்ள மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒரு படகில் சென்ற மீனவர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பத்திரமாக மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...