Main Menu

மே 18 – உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு

ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த நாள்தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும். அது மே 18,ம் திகதி என்பதே உலகத்தமிழர்கள்அனைவரும் மனதார நினைவு வணக்கம் செலுத்தும் நாளாகும் .

கடந்த 12 வருடங்களுக்கு முன் இதே நாளான 2009,மே,18ம் திகதிதான் ஆயுதவிடுதலைப்போராட்டம் மௌனித்த நாளாகும்.

கடந்த 12 வருடங்களாக ஒவ்வொரு மே,18ம் திகதியும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் ஏதோ ஒருவிதமாக பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டு வருகிறது

ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்தை தவறாது ஒவ்வொரு மேமாதம் 18,ம் திகதியும் தீபங்கள் ஏற்றிஅஞ்சலி செலுத்தி அன்னதானம் இறந்த உறவுகள் ஞாபகார்த்தமாக வழங்கி நினைவு உரைகள் நடாத்தப்படுகின்றன

விடுதலைப்போராட்டம் அகிம்சை ரீதியாக மூன்று சகாப்தமும் ஆயுதரீதியாக மூன்று சகாப்தமும் எமது மண்ணில் இடம்பெற்றது.

அது அரசியல் ரீதியான போராட்டங்களே அன்றி அரசியல் அல்லாத தனிக்குழு போராட்டங்கள் இல்லை இந்த அரசியல் ரீதியானவிடுதலைப்போராட்டங்கள் காரணமாகவே உண்மையை புரிந்து அதற்கான தீர்வை தர மறுத்த இலங்கை அரச தலைவர்கள் இன வன்முறையாகமாற்றி இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உண்மை.
போராட்டம் தியாகம் இழப்பு சாதனை சரித்திரம் அவலம் துயரம் எல்லாமே அரசியல்சார்ந்தவைகள்தான் அந்த இனப்படுகொலைக்கான தீர்வு நீதி வேண்டி சர்வதேசம் ஊடாக நாம் முன்எடுக்கும் அத்தனை செயல்பாடுகளும்அரசியல் சார்ந்த செயல்பாடே அன்றே தனிலாபம் பெறும் செயல்பாடுகள் இல்லை.

மே 18,ம் நாள் என்பது உலகவரலாற்றில் எந்த தமிழரும் மறக்கமுடியாத முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் என்பதை கருத்தில்கொண்டுஅந்த நாளை எமது உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவதே அந்த நாளுக்கு பெறுமதியாகும்.

12வருடங்கள் இன்று கடந்த போதும் எமது உண்மைக்காக உரிமைக்காக எந்த ஒரு தீர்வும் இன்றியே இந்த 12வது ஆண்டில் எமது உயிர்நீத்தமக்களை நினைவு கூருகின்றோம்.

சர்வதேச ரீதியில் கடந்த 12 ஆண்டுகளில் இனப்படுகொலைக்கான நீதி கேட்டு ஐ.நா, சபை ஊடாக பல விடயங்களை தமிழ்தேசியகூட்டமைப்புமற்றும் புலம்பெயர் உறவுகள் அமைப்புக்கள் முன்எடுத்தாலும் அதற்கான நீதி இந்த பத்துவருடங்களும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அதற்காக நாம் சோர்ந்து போகாமல் எமக்கான உரிமை எமதுமக்களுக்கான இனப்படுகொலைக்கான நீதி எமது வடகிழக்கு மக்களுக்கானஅரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையாக இலக்கை நோக்கி பயணிப்பதே இந்த 12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவில் நாம் உறுதிஎடுக்கும் விடயம்!

பகிரவும்...