Main Menu

மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிய கேப்டன் – ராகுல் காந்தி பற்றி பா.ஜனதா விமர்சனம்

மூழ்கும் கப்பலில் இருந்து கேப்டன் ராகுல் காந்தி, கப்பலில் இருந்து முதல்நபராக தப்பி விட்டார் என மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான்ராய்ப்பூர்:

மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு கப்பல் மூழ்கும்போது, அதை தடுக்க முயற்சிப்பதிலும், கடைசிவரை கப்பலில் இருப்பதிலும்தான் கேப்டன் கவனமாக இருப்பார். ஆனால், இங்கு கேப்டன் ராகுல் காந்தி, கப்பலில் இருந்து முதல்நபராக தப்பி விட்டார்.

கேப்டனே விலகும்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் விலகுவதில் ஆச்சரியம் இல்லை. குறைகளை கேட்க ஆள் இல்லாதபோது, அவர்கள் வேறு எங்கே போவார்கள்? காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு அக்கட்சி செய்த பாவம்தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...