Main Menu

மூன்று தேவாலயங்களில் – ஐந்து நட்சத்திர விடுதிகளில், குண்டு வெடிப்பு – பலர் உயிரிழப்பு…

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் இதுவரை  10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென, காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவபிட்டி ​தேவாலயம், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச சியோன் தேவாலயம் ஒன்றிலும், சின்னமன் கிரேன்ட், கிங்ஸ்​பெரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பில் பலர் காயம் – பலர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் 6 இடங்களில் பாரி குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து கிறிஸ்தர்வர்களின் தேவாலயங்களை இலக்கு  வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம்  கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...