Main Menu

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்! – பைசல் காசீம்

இலங்­கையில் கடந்த 21ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் எந்­த­விதத் தொடர்பும் இல்­லா­த­போ­திலும்,சில வைத்­தி­ய­சா­லை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு குறிப்­பாக, முஸ்லிம் பெண்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட வேண்டாம் என தாதி­யர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன் என்று சுகா­தார இரா­ஜாங்க அமைச்சர் பைசல் காசீம் கேட்­டுள்ளார்.

இது விட­ய­மாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தனது குழந்­தையைக் கூட கையில் வைத்­துக்­கொண்டு குடும்­பத்­தோடு தற்­கொலை செய்த சம்­ப­வத்தை நாம் உலகில் எங்­குமே கண்­ட­தில்லை. இஸ்லாம் தற்­கொ­லையை எதிர்க்­கின்­றது. தற்­கொலை செய்­ப­வ­ருக்கு நிரந்­தர நரகம் என்று சொல்­கி­றது. நல்ல நோக்­கத்­துக்­கா­கக்­கூட தற்­கொலை செய்ய முடி­யாது.

 இந்தச் சந்­தர்ப்­பத்தில் நாம் இலங்­கையர் என்ற வகையில் ஒன்­று­பட வேண்டும். நாட்டை முன்­கொண்டு செல்ல வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்­கக்­கூ­டாது.

சில வைத்­தி­ய­சா­லை­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல இன­வாத சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவ்­வா­றான சம்­ப­வங்­களை நீங்கள் தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும். சட்டத்தை மதித்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.  

பகிரவும்...