Main Menu

முழுமையாக உடற்தகுதி அடைந்துள்ளேன் – மத்தியூஸ்

முழுமையாக தாம் உடற்தகுதி அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கட் தொடர் எதிர்வரும் 4ம் திகதி முதல் 11ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு இன்று(திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அஞ்சலோ மத்தியூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தற்போது என்னுடைய உபாதை முழுமையாக குணமடைந்துள்ளது.

எனது பயிற்சிகள் அனைத்தையும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் மேற்கொண்டிருந்தேன். அதன் பின்னர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடினேன்.

ஆனால், இதுவரை பந்து வீசுவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. தற்போதைக்கு பந்து வீசுவதற்கான எண்ணம் இல்லை. தேர்வுக் குழுவிடம் கலந்துரையாடி, முழுநேர துடுப்பாட்ட வீரராக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...