Main Menu

முல்லையில் மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மாற்றுத்திறனாளிகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்கள், இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் கையளித்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் பேருந்துகளில் ஆசனங்கள் ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையிலும் தாம் இன்று ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்

பகிரவும்...