Main Menu

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காயமடைந்த 7 மாணவர்களும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...