Main Menu

மும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன்

நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களும் அரச அதிகாரிகளும் மும்மொழிகளை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டின் எதிர்காலம் மும்மொழியில் தங்கியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த இளம் தலைமுறையினரை மூன்று மொழிகளையும் கற்பதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

அத்தோடு, அரசாங்க ஊழியர்கள் இரண்டாவது மொழியை கட்டாயமாக கற்க வேண்டும். பயன்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...