Main Menu

முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள் – திங்கட்கிழமை இறுதிச்சடங்கு

முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்துள்ளதை அடுத்து, திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதுவரை அவரது உடலம் எலிசே மாளிகையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அவரது உடலத்தை காண வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், பரிஸ் நகரமண்டபத்துக்கு முன்னாலும் மக்கள் குவிகின்றனர். நகரமண்டபத்தில் பெரிய திரை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் Jacques Chirac இன் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் காண்பிக்கப்படுகின்றது.  இந்நிலையில், அங்கு குவியும் ஏராளமான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் அஞ்சலி செலுத்தி, அமைக்கப்பட்டுள்ள திரையுடன் புகைப்படங்களும் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பகிரவும்...