Main Menu

முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள் நிறைவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதல் நாள் இன்று மாலை 4.15 மணியுடன் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல்மூல வாக்குப்பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் நடந்துமுடிந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளையும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, பொலிஸ், தேர்தல் செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் பணியாற்றும் அஞ்சல் வாக்காளர்களுக்கு நவம்பர் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...