Main Menu

முடிவுகளை அறிவிக்க நேரம் எடுக்கும் – தேசப்பிரிய

371 தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்களில் 103 நிலையங்களின் மாத்திரம் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவை மாவட்ட தெரிவத்தாட்சி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு மாவட்டம் ஒன்றுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இறுதி செய்யமுடியாதுள்ளமையாலும் நேரகாலத்திற்கு தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதில் 70 வாக்கெண்ணும் நிலையங்களின் முடிவுகள் பக்ஸ் மூலமாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேகாலை தேர்தல் தொகுதியில் இருந்து வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல இரவு 10 மணிக்கும் கூடுதல் நேரம் எடுத்ததால் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நேரம் நீடிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...