Main Menu

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது: அவுஸ்ரேலிய பிரதமர்!

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது. மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அப்போதுதான் அதன் தாக்கத்தை முழுமையாக கண்டறிய இயலும்.

முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல் நலம் குன்றியவர்கள் மட்டும் அணிந்தால் போதும். இதனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம். தற்போது மக்கள் பயன்படுத்தும் முக கவசங்கள் அனைத்துமே தரமானவை என்று கூற முடியாது. இவை மக்களுக்கு அசவுகரியம் தருபவையாகவும் உள்ளன.

அதேநேரம் விமான நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமான ஒன்று. பாடசாலைகளில் மாணவ, மாணவர்கள் 1.5 மீட்டர் அல்லது 4.5 சதுர மீட்டர் சமூக இடைவெளி விதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயமில்லை.

பாடசாலைகளில்; ஒரு மாணவரிடம் இருந்து இன்னொரு மாணவருக்கு கொரோனா பரவுவதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் வீடுகளில் இருந்தபோதுதான் பெற்றோர் மூலம் அவர்கள் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது, தெரிய வந்துள்ளது’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 15,071பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 530பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...