Main Menu

மார்செய் : 48 மணி நேரத்தில் இருவர் சுட்டுக்கொலை

கடந்த 48 மணிநேரத்தில் Marseille நகரில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, 15 ஆம் வட்டாரத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இத்துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டான். இளைஞனது தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாகவும், உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பாகவே இளைஞன் சாவடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய இரவில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது. Marseille இன் 13 ஆம் வட்டாரத்தில் வைத்து 30 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் காவல்துறையினரால் அறியப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்விரு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, Marseille மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் எட்டு பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பகிரவும்...