Main Menu

மற்றுமொரு தலிபான் ராஜ்ஜியம் உருவாக அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி

மற்றுமொரு பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பிரசார பணிகளில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், மற்றுமொரு பாகிஸ்தான் அல்லது தலிபான் ராஜ்ஜியம் உருவாக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளதுடன், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம் எனவும் கூறியுள்ளார்.

இவருடைய கருத்துக்கு தற்போது எதிர்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...