Main Menu

மரீன் லு பென் நாட்டை பிளவு படுத்துகிறார் – இம்மானுவல் மக்ரோன்

நாளை மறுநாள் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று இடம்பெற உள்ள நிலையில், இம்மானுவல் மக்ரோன் தனது போட்டியாளரான மரீன் லு பென்னை தொடர்ச்சியாக தாக்கி வருகிறார்.

இன்று Seine-Saint-Denis மாவட்டத்துக்கு பயணித்த இம்மானுவல் மக்ரோன், அங்கு குறைந்த வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களைச் சந்தித்தார். பின்னர் அவர் மக்களிடம் தெரிவிக்கும் போது, ‘மரீன் லு பென் நாட்டை பிளவு படுத்துகிறார். குடியேற்றத்தை எதிர்ப்பதோடு, இஸ்லாமிய கலாச்சார உடைக்கும் தடை விதிக்கிறார். நாம் தீவிர வலதுசாரியத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பக்கூடாது!’ என தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் வேளையில், இம்மானுவல் மக்ரோன் தனது பிரச்சாரங்களின் போது தொடர்ச்சியாக மரீன் லு பென்னை தாக்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...