Main Menu

மடுத் திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று!

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நவநாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று காலை திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

மடுத் திருத்தல ஆடித் திருவிழாவில் ஆண்டுதோறும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகைதரும் பெருந்திரளான யாத்திரியர்கள் கலந்துகொள்வது வழமை.

எனினும் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...