Main Menu

மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார்.

கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். நோய் பரவலை கட்டுப்படுத்துவற்காக அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்க விதிகளை முழுமையாக கடைப்பிடித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.

நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை எட்டிய தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. பொதுமுடக்கம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவை மூலம்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...