Day: July 5, 2021
கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்டதாக எச்சரித்த பின்னர் அவர் சுய தனிமைப்படுத்தத் தொடங்கினார். இதுதொடர்பாகமேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு படை தாக்குதல்: 25பேர் உயிரிழப்பு!
மத்திய மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் 25பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. தலைநகர் நய்பிடாவிற்கு வடக்கே சுமார் 300 கி.மீ (200 மைல்) தொலைவில் உள்ள மத்திய சாகிங் பிராந்தியத்தில் உள்ள டெபாயின் டவுன்ஷிப்பில் கடந்த வெள்ளிக்கிழமைமேலும் படிக்க...
போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!
போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில்மேலும் படிக்க...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளு மன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு!
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறுமேலும் படிக்க...
மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் – மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார். கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்துமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீன் மனுமீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார். அதன்படி, மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் கொண்ட அமர்வில் இருந்துமேலும் படிக்க...
மக்கள் மீது அச்சுறுத்தல்களும் அடக்குமுறையும் தொடர்வதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதனைத் தாங்க முடியாத அரசாங்கம் தற்போது அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்மேலும் படிக்க...
தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும்- காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகள்
தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை, இன்று (திங்கட்கிழமை) எட்டியுள்ளது. இந்நிலையில் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமேலும் படிக்க...