Main Menu

மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மக்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் உடனடியாக ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு அரசாங்கம் உரியவகையில் நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

பகிரவும்...