Main Menu

மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்!

பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இளவரசர் குறித்து தினந்தினம் வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளால் மகாராணி பெரும் கவலையிலும், மனஅழுத்தத்திலும் இருப்பதாக, மகாராணியின் நண்பர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிரவும்...